ஆத்தங்கரை ஓரத்திலே ஆயிரந்தோப்பு எந்தோப்பு !
சொல்லிக் கொடுத்தது சந்தணமா ?
சந்தணமென்ன நாறாதா ?
நாறக்கும் கருவாடா ?
கருவாடென்ன காயாதா ?
காயக்கும் தட்டானா ?
தட்டானென்ன கொட்டாதா ?
கொட்டக்கும் கோயிலா ?
கோயில் என்ன கும்பிடாதா ?
கும்பிடக்கும் ராசாவா?
ராசாவென்ன பேசாதா ?
பேசக்கும் பல்லியா?
பல்லி என்ன பதுங்காதா ?
பதுங்கக்கும் கள்ளனா ?
கள்ளன் என்ன ஓடாதா?
ஓடக்கும் தண்ணியா ?
தண்ணி என்ன உடையாதா ?
உடையக்கும் தேங்காயா ?
தேங்காய் என்ன தூங்காதா ?
தூங்கக்கும் வௌவாலா ?
வௌவாலென்ன கவ்வாதா ?
கவ்வக்கும் நாயா ?
நாயென்ன குலைக்காதா ?
குலை கக்கும் வாழையா ?
வாழையென்ன வழுக்காதா ?
வழுக்கக்கும் பாம்பா?
பாம்பென்ன கொத்தாதா?
கொத்தக்கும் கோழியா?
கோழி என்ன கூவாதா ?
கூவக்கும் நரியா?
நரியென்ன ஊளம் போடாதா ?
......
கூறியவர்: நே.சபினா - செவிலியர்
கருங்கல், கன்னியாகுமரி மாவட்டம்
No comments:
Post a Comment