Thursday, December 11, 2014

மெல்லத் தமிழ் இனிச் சாகும்

”மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று பாரதியார் அன்றே சொன்னார் ” என்ற வரிகளை அவ்வப்போது கேட்க நேரிடும். பாரதி கவிதையை முழுதும் படிக்காமல் அவ்வாறு சொல்ல நேரிடுகிறது. மெல்லத் தமிழினிச் சாகும் என்பது பாரதியின் கருத்தன்று. பாரதியின் காலத்திலிருந்த பேதையருள் ஒருவன் தமிழின் திறமையைக் கேள்விக்குள்ளாக்கி அவ்வாறு கூறினான். இதனால் மனம் நொந்த பாரதியார் தமிழன்னை தன் மைந்தருக்குரைப்பதாய் எழுதிய கவிதையில் தான் இவ்வாறு கூறியுள்ளார். கேளுங்கள்.

Tuesday, December 2, 2014

குறளமுதம் - புது முயற்சி


திருவள்ளுவர் பிறந்தநாள் நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்பட உள்ளது என்பதைக் கேட்ட போது கட்டற்ற களிப்புண்டாயிற்று. வட இந்தியர்களுக்கும் புரியும் வகையில் திருக்குறளை எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தேன். சோதனை முயற்சியாகத் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளில் திருக்குறளைத் தந்துள்ளேன். இன்னுமதிக மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்பது என் பேரவா. திக்கெட்டும் திருக்குறளின் மேன்மை பரப்பிடுவோம்.

திருமந்திரம் - ஒலி வடிவில்




நேரம் கிடைக்கும் போது  இன்னுமதிகப் பாடல்களைச் சேர்த்திடுவேன். இணைந்திருங்கள்.